யானையும் அங்குசத்துக்கு அடங்கும், கப்பலும் நங்கூரத்திற்கு நிற்கும், சூரியனும் இரவில் மறையும், குதிரையும் கடிவாளத்திற்கு அடங்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் பலம் பலவீனம் உண்டு. பலம் பலவீனம் அறிக.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாளை என்ன செய்யலாம் என யோசியுங்கள். நாளை என்ன நடக்குமோ என யோசிக்காதீர்கள். அது உங்கள் உற்சாகத்தைக் கெடுத்துவிடும்.!
மானின் வேதனையும் கண்ணீரும் சிங்கத்திற்கு புரிவதில்லை. சிங்கத்தின் நோக்கம் மானின் இரத்தமும் கறியும் தான். மான் போல சிலர் சிங்கம்போல சிலர்.!
நல்லவர்களாக வாழ்வதில் ஒரு துன்பமுமில்லை. ஆனால், அதை மற்றவர்களுக்கு நிரூபிக்கப் படுகிற பாடு இருக்கிறதே அதுதான் துன்பத்திலும் பெருந்துன்பம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாருக்கேனும் என்னை பிடிக்காதா..? எனும் நெருக்கடியை விட, யாருக்கும் பிடிக்கா விட்டால்தான் என்ன..?? எனும் சுதந்திரம் அழகு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் வருவார்கள். சிலர் போவார்கள். சிலர் நன்மைகள் செய்வார்கள். சிலர் தீமைகள் செய்வார்கள். சிலர் விசுவாசமாக இருப்பார்கள். சிலர் துரோகங்கள் செய்வார்கள். சிலர் சிரிக்க வைப்பார்கள். சிலர் அழ வைப்பார்கள். சிலர் சிந்திக்க வைப்பார்கள். சிலர் சிந்திக்கவிடாமல் வைப்பார்கள். எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லா மிருகங்களும் அதனதன் குணத்தில் தான் வாழ்கிறது. மனிதன் மட்டும் தன் குணத்தை விட்டு எல்லா மிருக குணத்தின் கலவையாக வாழ்கிறான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
														
																												
														
																												
														
																												
                    