கேள்விகள் தரம் தாழ்ந்தவையாக இருக்கும் போது பதில்கள் திமிராக இருப்பதில் ஒன்றும் தவறில்லை தானே?
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பின் என்றோ ஒரு நாளில், அதெல்லாம் ஒரு பொற்காலம் என சொல்லப்போகும் இந்நாளை வெகு சாதாரணமாய்க் கடந்து கொண்டிருக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வானம் ஒரே மாதிரி இருந்தாலும் வானிலை ஒரே மாதிரி இருப்பதில்லை. வாழ்க்கையும் அப்படித்தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம் மீது விமர்சனம் செய்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்., நமது செயல்கள் மூலம் அவர்களுக்கு பதில் சொல்வதே சிறந்த வழி.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மாத்திரை உண்டு என்பது உண்மையல்ல. ஆனால், நாளடைவில் ஒவ்வொரு மாத்திரைக்குப் பின்னாலும் நிச்சயமாக ஒரு நோய் உண்டு.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்ற எல்லா பண்புகளையும் விட சிறந்தது தைரியமே... ஏனெனில் நம்மிடம் தைரியம் இல்லாத போது மற்ற பண்புகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்காது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதவையை முன்னிறுத்தி செய்யும் காரியங்கள் விளங்காது என்பவர்களே, உங்களை முன்னிறுத்தித்தானே அவளின் முகூர்த்தமே நடந்தது.!
