குப்பை தொட்டி நாற்றமாம், குப்பை போட்டவர்கள் மூக்கை பொத்திக் கொண்டார்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எப்போதும், எங்கு இருந்தாலும், எப்படி மகிழ்ச்சியாய் இருக்கிறாய். என கேட்கிறீர்கள்...!! வாழ தெரிந்த தவளைக்கு தரையென்ன.! தண்ணீரென்ன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
முருங்கை கிளைக்கு சத்து இல்லை, முருங்கை இலைக்கு இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. வடிவத்தில் இல்லை வாழ்க்கை..! - கபிலன்
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அடுத்தவர் ஆயிரம் சொல்வார் அது அவர்களுக்கு பொழுதுபோக்கு. ஆனால் நீ எடுக்கும் அனைத்து முடிவுகளும் உன்னுடையதாக இருக்க வேண்டும். இது உன் வாழ்க்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கஷ்டப்பட்டு நாலு பஸ் மாறி வந்த பெரிப்பாவ விட்டுட்டு ஏன் இப்போதான் கார்-ல வந்த சித்தப்பாவ எல்லாரும் இப்பிடி கவனிக்குறாங்க எனக் குழம்பி நிற்கிறாள் அக்கா மகள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
கோவிலுக்கு போயிட்டு ராத்திரி இருட்டுல தனியா வந்துட்ருக்கறப்போ, திடீர்னு ஒரு உருவம் எதிர்ல வந்தா, பேயா இருக்குமோன்னு மனசு ஒரு செகண்ட் பதறுமே தவிர, நாம கும்புட்டுட்டு வந்த கடவுள் நேர்ல வந்திருக்காரோன்னு நெனைக்காது. அவ்வளவுதான் சிலபேரோட கடவுள் நம்பிக்கை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உலகத்தில் மிக சவாலானது நம்மைப் பற்றிய பிறரது கற்பனைகளோடு நாம் போராடுவதுதான். -மனுஷ்யபுத்திரன்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு வாழ்வை வாழ ஆரம்பிக்கும் போது, நம் வாழ்வை இழக்க ஆரம்பிக்கிறோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
தயங்காமல் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். அதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
