அந்தந்த நொடியை மகிழ்வாக, அழகாக, ஆரோக்கியமாக, இனிமையாக நேர்மையாக வாழப்பழகுங்கள். அடுத்த நொடியைப்பற்றி கவலைப்படாதீர்கள். அடுத்த நொடி என்பது கானல் நீர் போன்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
இருக்கும்போது சிலருடைய அருமை பலருக்கு புரிவதில்லை, இறந்த பின்பும் சிலருடைய அருமை பலருக்கு புரிவதில்லை. காலம் கடந்து தான் சிலருடைய அருமை பலருக்கு புரிகிறது, புரிந்தும் அப்போது பயனற்றதாகி விடுகிறது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நினைப்பதை எல்லாம் தடையேது மின்றி நடத்திக்காட்டும் ஆளச்சிறந்த சக்தி கனவுகள். கனவு காணுங்கள்.
வாழ்நாள் முழுவதும் முயன்றாலும் இங்கு ஒருவரை கூட உன்னால் திருப்தி படுத்த முடியாது. உனக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது, உன் வாழ்க்கையை நீ வாழ்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு தேவையானது அனைத்தும் நம்மை சுற்றியே உள்ளன, நாம் தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும்.!
அளவோடு சிந்தித்தால், அவசியமானதை சிந்தித்தால் சிந்தித்தவன் சிந்தனைவாதி ஆவான். அளவுக்கு மீறி சிந்தித்தால் சிந்தித்தவனுக்கு சிந்தனையே வியாதியாகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வீசும் கற்கள் எல்லாம் அதே இடத்தில் விழுந்து கிடக்க, நதி மட்டும் தன் பாதையில் போவது போல,.. நம்மை ஏளனம் செய்பவரை கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் வெற்றி பெற.!
செய்துமுடிக்கும் வரை, எல்லாம் செய்ய முடியாதது போல தான் இருக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
No. of Trees Planted