கடவுளிடம் வேண்டிக் கிட்டு காணிக்கை செலுத்தியது தான் உலகின் முதல் லஞ்சம். அதையும் அவர் ஏற்றுக்கிட்டு நிறை வேற்றாமல் போனதுதான் உலகின் முதல் ஊழல்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கென ஓர் அறிவு இருக்கிறது. அது நம் உபயோகத்திற்குத் தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதை நாம் உபயோகித்து வாழ்ந்தால் மட்டுமே நாம் வாழலாம். இல்லை யெனில் மற்றவர் வாழ நாம் உபயோகப் படுவோம் அவ்வளவுதான்.!
அன்னைக்கு புழுவா இருந்தப்ப ச்சீன்னு சொன்ன அதே வாய் தான், இன்னைக்கு பட்டாம்பூச்சியா பறக்கும் போது வாவ்ன்னு சொல்லும். அதனால மத்தவனுக்காக வாழாம, நமக்காக மாறுவோம்!!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒன்றி வாழ ஒத்தக் கருத்துக்கள் அவசியமில்லை! ஒருவரின் கருத்தை இன்னொருவர் மேல் திணிக்காமல் இருப்பது மட்டுமே அவசியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்முடைய தவறுகளுக்கு மற்றவர்களைக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் வெற்றி நம்மை தேடி வர வெகு காலம் ஆகும். காரணங்கள் சொல்லாமல் காரியங்கள் செய்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் இனி நடக்க போவதில்லை என்று முழுமையாக தெரிந்த பின்னரே, இந்த உலகம் நீங்கள் போகும் பாதையில் பூக்களை தூவ ஆரம்பிக்கும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
சிலர் நம்முடன் பேசுவது நமக்கு கிடைத்த புண்ணியம். நாம் சிலருடன் பேசாமல் நகர்வதே நமக்கான கண்ணியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
Maturity என்பது... புரிந்து கொள்வதோ, புரிய வைப்பதோ, அல்ல. புரிய வைக்க முடியாது.. என்பதை புரிந்து கொள்வது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த வழியில் வந்தால் என்ன..?? அது நம் பணம் தானே என்று எண்ணி வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கான பல மடங்கு விலையை உங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் கொடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் என்பதை மறவாதீர். வாக்கு என்பது நமது உரிமை. கட்டாயம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
