சாணியை மிதிச்சா கால கழுவிட்டு போய்கிட்டே இருக்கணும். எருமைகிட்ட போய் இங்கே சாணி போடாதே`னு Advice எல்லாம் பண்ணக்கூடாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பேசத் தகுந்த மனிதரோடு பேசத் தவறிவிட்டால் நாம் அவரை இழந்து விடுகிறோம். பேசத்தகாத மனிதரோடு பேசினால் நமது வார்த்தைகள் பயனற்று வீணாகி விடுகின்றன. அறிவாளி என்பவன் நல்ல மனிதரையும் இழக்க மாட்டான். வார்த்தைகளையும் வீணாக்க மாட்டான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.!
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எந்த காலம் காயைக் கனியாக்குகிறதோ... அந்தக் காலம் கனியை அழுகவும் வைக்கிறது. காலம் தன் கடமையை செய்து கொண்டே இருக்கும். நாம் தான் அதற்குள் ரசித்து வாழ வேண்டும்.!
சம்பாதிக்க ஒரு புத்தி வேண்டும். சம்பாதித்ததை சேமிக்க ஓரு புத்தி வேண்டும். சேமித்ததை செலவழிக்க ஒரு புத்தி வேண்டும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.!
போராடி கிடைக்கும் தோல்வி கூட, கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
உறுதியான மனிதருக்கு தோல்வி என்று எதுவுமில்லை, போகும் பாதையில் கற்றுக்கொள்ள பாடங்கள் மட்டுமே உள்ளன.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பிடித்ததை அடிக்கடி நினைக்க பழகுங்கள் மகிழ்ச்சி கிடைக்கும். பிடிக்காததை முடிந்தவரை மறக்க முயலுங்கள் நிம்மதி கிடைக்கும். இரண்டுமே வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
மனிதர்களுள் இருவகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை மற்றவர்கள் திறமையைப் பயன் படுத்தாதவர்கள். எல்லோருக்கும் இருக்கும் திறமையை பயன்படுத்துவோம்.!
No. of Trees Planted