எதிர் பார்ப்பதெல்லாம் எதிரில் வருவதில்லை எதிரில் எது வருகிறதோ, அதை எதார்த்தமாக ஏற்றுக் கொண்டு கடந்து செல்ல, மகிழ்ந்திட வாழப்பழகுங்கள்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அனுபவம் என்பது எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கிறது அந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தார்கள் என்பதே வெற்றிக்கும் தோல்விக்கும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகிறது.!
திறமையானவர்கள். திறமையை அறியாதவர்கள், திறமையை பயன்படுத்தாதவர்கள் என மூன்று வகையினர் மட்டுமே உலகில் உள்ளனர். திறமையில்லாதவர்கள் என்று உலகில் எவரும் கிடையாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எல்லாம் உன் அருகில் இருந்தாலும், எல்லாம் உனக்கு கிடைத்தாலும், எல்லாம் உன்னை நோக்கி வந்தாலும் அன்னப்பறவை போல வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு, வேண்டாததை விலக்கி விடு.
பின்குறிப்பு :அன்னப் பறவையால் தண்ணீரையும் பாலையும் பிரித்தெடுக்க முடியாது. இந்திய சிந்தனையில் அன்னம் பெரும்பாலும் முனிவர்கள், யோகிகள் மற்றும் ஞானிகளுடன் தொடர்புடையது. ஒரு ஞானி உண்மையிலிருந்து பொய்யை வேறுபடுத்திப் பார்ப்பது போல, அன்னம் பாலிலிருந்து தண்ணீரைப் பிரிப்பதாக கவிதை ரீதியாகக் கூறப்பட்டது.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
