தேவை முடிந்தவுடன் தேரா இருந்தாலும் நடுத்தெருவில் தான்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நாலு பேர் குறை சொன்னால் நம்மிடம் குறை இருக்கிறதென்று அர்த்தம் இல்லை. அந்த நாலு பேருக்கும் வேறு வேலை இல்லை என்றுதான் அர்த்தம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நான் தேர்ந்தெடுத்த புத்தகத்தை வேறு ஒருவரும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். ஆனால் நான் புரிந்து படித்த அளவிற்கும், நான் ரசித்த அளவிற்கும், அவரால் ரசிக்க முடியாது. ஒவ்வொருத்தரின் அனுபவம் தனித்தன்மை வாய்ந்தது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
யாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளாத வரை, உங்களுக்கு உங்களை தவிர வேற எதிரியும் இல்லை, துரோகியும் இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
பயத்தையும் வலியையும் நான் என் இதயத்தில் அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற வரை என்னால் உண்மையிலேயே ஒரு சுதந்திரப் பறவையாக இருக்க முடியாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீ வாழாத வாழ்வியலை யாரேனும் ஒருவர் வாழ்ந்து கொண்டிப்பார். உன்னைப் போல் வாழவும் யாரேனும் ஒருவர் ஏங்கிக் கொண்டிருப்பார். கிடைத்ததும் கிடைப்பதும் சொர்க்கம் என கடந்து போ.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நீங்கள் வாழ்க்கையில் எந்த உயரத்தை எட்டுகிறீர்கள் என்பது, நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கின்றீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல, ஆனால் எவ்வளவு நன்றாக சிந்திக்கின்றீர்கள் என்பதை பொருத்தே தீர்மானிக்கப் படுகின்றது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அநேக மனிதர்கள் தங்களுக்குள் புதைந்து இருக்கும் பொக்கிஷத்தை பார்க்கத் தவறி விட்டனர். அது மட்டுமல்லாமல் வாழ்க்கையின் சிறந்த வருடங்களை தொலைக் காட்சியின் முன் இருந்தே கழித்து விடுகின்றனர்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
எதை தெரிந்து கொள்ள நினைத்தாலும் குழந்தை மனநிலையுடன் அதை கற்க தயாராகுங்கள். எப்போது எனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கிறோமே அப்போதே நாம் வளர்வது நின்று போகும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
ஒரு தாய் பிள்ளைகளை பெறுவதற்காக அழலாம் ஆனால், பெற்றதற்காக அழக்கூடாது.
அன்னையர் தினம் வாழ்த்துக்கள்.
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
